மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..!! மிக மோசமான தாக்கத்துடன் பரவும்..!! பாபா வங்காவின் கணிப்பால் உலக நாடுகள் பீதி..!!

Baba Vanga Corona 2025

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future As I See It” என்ற புத்தகத்தை எழுதிய ஜப்பானிய பாபா வங்கா, 2020ஆம் ஆண்டு ஒரு மர்ம வைரஸ் உருவாகும் என்றும், அது ஏப்ரலில் குறைந்து மறைந்து விடும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், அதே வைரஸ் 2030ஆம் ஆண்டில் மிகவும் மோசமான தாக்கத்துடன் உருவாகி பரவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாபா வங்காவின் இந்த கணிப்புகள் எதிர்காலக் கணிப்புகளுடன் ஒப்பிடப்பட்டு பரப்பப்படுகிறது. அதன்படி, 2030 ஆண்டுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகாரித்து வருவதை இதை சுட்டிக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், 2025ஆம் ஆண்டில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே ஜூலை மாதத்தில் கடலுக்குள் பெரும் பிளவு ஏற்படும் என்றும், இது மிகப்பெரிய அளவில் சுனாமியை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பெரும் சுனாமி 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும், அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்றும் கணித்து வைத்துள்ளார். ஏற்கனவே பாபா வங்காவின் கணிப்புகள் பல அப்படியே நடந்துள்ள நிலையில், இந்த கணிப்புகளும் நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது.

Read More : கிராம நிர்வாக அலுவலராக (VAO) ஆசையா..? சூப்பர் வாய்ப்பு..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாதம் ரூ.81,000 வரை சம்பளம்..!!

CHELLA

Next Post

பதிவு மசோதா 2025... 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்..‌.!

Wed May 28 , 2025
“பதிவு மசோதா 2025’ வரைவு குறித்து பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என நில வளத்துறை தெரிவித்துள்ளது ‌. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளத்துறை, நவீனமிக்க, ஆன்லைன் வழி, காகிதமற்ற மற்றும் குடிமக்களுக்கு உகந்த ‘பதிவு மசோதா 2025’ என்ற வரைவைத் தயாரித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு முந்தைய பதிவுச் சட்டம், 1908-க்கு மாற்றாக […]
stamp paper 2025 1

You May Like