பாசி பருப்பு உடலுக்கு பல்வேறு சத்துகளை வழங்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்களால் இது பலருக்கும் நன்மை தருகிறது. பருப்பு சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பருப்பை உட்கொள்வது சிலருக்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பச்சை பயிறு அல்லது பாசி பருப்பை உட்கொள்ளக்கூடாது? தெரிந்து கொள்வோம்.
குறைந்த இரத்த சர்க்கரை உள்ளவர்கள்: பாசி பருப்பில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை வாய்ந்த மூலக்கூறுகள் அதிகம் காணப்படும். எனவே, குறைந்த இரத்தச் சர்க்கரை (Hypoglycemia) கொண்டவர்கள் இதனை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும்.
சிறுநீரக கல் பிரச்சனைகள் உள்ளவர்கள்: சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். பாசி பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் ஆக்ஸலேட் உள்ளதால், இது சிறுநீரகங்களில் கல் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, இவர்களுக்கு இது ஏற்றதல்ல.
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள்: யூரிக் அமில அளவு அதிகமுள்ளவர்கள் பாசி பருப்பை தவிர்க்க வேண்டியது அவசியம். இதில் உள்ள அதிகப்படியான புரதம், உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது வாயுவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
பாசி பருப்பு ஒரு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், குறிப்பிட்ட உடல்நிலை கொண்டவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. உணவைத் தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் உடல்நிலை தேவைகளை கவனித்துக் கொள்ளுங்கள்.