கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா PCOS-லிருந்து எப்படி விடுபட்டார்..?

sara tendulkar

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சாரா டெண்டுல்கர், குழந்தையாக இருந்தபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது PCOSலிருந்து விடுபட்ட சாரா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.


சாரா ஏழாம் வகுப்பு படித்தபோதே கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்டதாக கூறினார். முகத்தில் அதிக எண்ணெய், முடி வளர்ச்சி, எடை உயர்வு உள்ளிட்ட PCOS அறிகுறிகள், அவரது தன்னம்பிக்கை பெரிதும் பாதித்தன. பல வகையான தோல் சிகிச்சைகள் மற்றும் சோனோகிராஃபி முடிவுகள் மூலம் அவரது PCOS உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் செய்த சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில், ஒரு சிறந்த உட்சுரப்பியல் நிபுணரின் பரிந்துரை மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

சாரா கூறுகையில், “சீரான உணவு முறை, எடை பயிற்சி, புரதச்சத்து முக்கியத்துவம், தண்ணீர் அதிகம் குடிப்பது போன்றவை எனது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவின.” என்றார். அதனைத் தொடர்ந்து, அவர் தனது தினசரி வாழ்க்கையை சீராக்கி, காலையில் பிளாக் காபி மற்றும் வலிமையான உடற்பயிற்சிகள் ஆகியவற்றைச் சேர்த்தார்.

PCOS என்பது சாதாரண ஹார்மோன் கோளாறு மட்டுமல்ல, அது ஒருவர் வாழ்நலத்தையும் மனநலத்தையும் பெரிதும் பாதிக்கும். சாராவின் அனுபவம், இந்த நிலைக்கு இருக்கும் பெண்கள் மன உறுதியுடன் தொழில்முறை உதவியை நாடினால் வெற்றிகரமாக முகம்கொடுக்கலாம் என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது.

PCOS என்றால் என்ன? இது கருப்பைகள் சிறிய நீர்க்கட்டிகளால் நிரப்பப்படும் ஒரு பிரச்சனை. கருப்பைகளில் ஆண் ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தி காரணமாக, கருப்பைகள் வளர்வதை நிறுத்தி நீர்க்கட்டிகளாக மாறுகின்றன. பிசிஓஎஸ், வேதியியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது.

காரணங்கள்:
பரம்பரை,
மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை,
ஹார்மோன் பிரச்சனைகள்.

அறிகுறிகள்: PCOS இன் ஆரம்ப அறிகுறி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஆகும். மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், தாமதமான மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தம், உடல் பருமன், முடி வளர்ச்சி மற்றும் முகப்பரு ஆகியவை PCOS இன் அறிகுறிகளாகும்.

Read more: சனி தோஷம் உள்ளவர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..?



Next Post

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை...! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா...?

Fri May 30 , 2025
கோவை உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வங்காள வங்கதேச கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
Thunder Rain 2025

You May Like