Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..? – இன்றைய நிலவரம் இதோ!

Gold Rate today 1

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.


தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான்.

அப்படிப்பட்ட தங்கம் சர்வதேச பொருளாதார சூழலின் மத்தியில் உள்ள கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டி புது வரலாறை படைத்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக போக்கு காட்டி வந்தது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்றும் விலை குறையுமா என நகைப்பிரியர்கள் எதிர்ப்ப்பார்த்தனர். ஆனால் இன்றைய தினம் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யபடுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து எட்டாவது நாளாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிக்கிறது.

Read more: மகப்பேறு விடுமுறையில் முக்கிய மாற்றம்.. பெண் அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்..!!

Next Post

பகீர்!. புவி வெப்பமடைதலால், பெண்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Fri May 30 , 2025
வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, ​​புற்றுநோய்களின் பாதிப்பு ஒரு லட்சம் பேரில் 173 முதல் 280 வழக்குகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் புவி வெப்பமடைதல் பெண்களுக்கு புற்றுநோயை மிகவும் பொதுவானதாகவும் ஆபத்தானதாகவும் மாற்றக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதி உலகின் பிற பகுதிகளை விட மூன்று தசாப்தங்களுக்கு முன்பே மூன்று முதல் நான்கு […]

You May Like