கிராமப்புற மாணவர்களுக்காக சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM ஸ்டாலின்..!! தமிழ்நாட்டில் மேலும் 4 இடங்களில் தொடக்கம்..!!

CM Stalin 2025

தமிழ்நாட்டில் புதிதாக 4 அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கடந்த 26ஆம் தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”2025 – 26ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் துறையூர், வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், புதிய கல்லூரிகள் தொடங்குமாறு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டால், 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.

ஏற்கனவே, 2025 – 26ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், உயர்கல்வித்துறை சார்பில் ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, ஒட்டப்பிடாரம், பெரம்பலூர், குன்னூர், நத்தம், பண்ருட்டி, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அரசியல் கல்லூரிகள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “பஹல்காம் தாக்குதலுக்கு ஸ்கெட்ச் போட்டதே நான் தான்”..? பாகிஸ்தான் பேரணியில் முழங்கிய பயங்கரவாதி..!! இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டமா..?

CHELLA

Next Post

நீட் தேர்வு மட்டும் தான் உலகமா..? அதை தாண்டி உலகில் சாதிக்க பல உண்டு..!! - மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

Fri May 30 , 2025
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]
vijay 1 1

You May Like