தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவர்கள் இந்த விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் ஜூன் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதேபோல், இந்தாண்டும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கடந்த வாரம் வரை கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த ஒருவாரமாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வழக்கமான கோடை காலம் போல், இல்லாமல் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில், திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இருப்பினும், கனமழை தொடர்வதால், பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி என்றும், ஜூன் 9ஆம் தேதி திறக்கப்படுவதாக பரவி வரும் செய்தி வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Read More : “பாமகவின் பொருளாளர் நான் தான்”..!! “ராமதாஸின் அறிவிப்பு செல்லாது”..!! திலகபாமா பரபரப்பு பேட்டி..!!