திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்..!! – ராமதாஸ் அதிரடி

ramadoss

திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை மகன் இடையேயான மோதல் நடந்திருக்கிறது. ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கேற்றார் போல் கடந்த சில தினங்களாகவே செய்தியாளர் சந்திப்புகளின் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றங்களை முன்வைத்தார்.

பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளுடன் சந்திப்பை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணிக்கு ஆதரவாக இருந்த திலகபாமா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்.

ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியவர்களை மீண்டும் அதே பொறுப்பில் நியமித்து அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இது ராமதாசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அன்புமணியின் ஆதரவாளர்களாக உள்ள அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்க முடிவு செய்துள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதில் வன்னியர் சங்க காலத்தில் இருந்து கட்சிக்காக தீவிரமாக உழைத்து தற்போது பதவி எதுவும் இல்லாமல் இருப்பவர்களை பட்டியல் எடுத்து அவர்களுக்கு பதவி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Read more: கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!! – அரசு அறிவுறுத்தல்

Next Post

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று உறுதி... 4 பேர் பலி..!!

Sun Jun 1 , 2025
இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் மே 31 சனிக்கிழமை நிலவரப்படி நாட்டில் 3,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் மற்றும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 […]
india corona

You May Like