நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று கோர விபத்திற்குள்ளானதில், 21 இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, பேருந்தில் இளம் வீரர்கள் 21 பேரும் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கோர விபத்தில் 21 வீரர்களும் பரிதாபமாக பலியானார்கள். விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் அதிகக் களைப்புடன் இருந்திருக்கலாம் அல்லது வேகக் கட்டுப்பாட்டை மீறியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பேருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் வேகம் வரையில் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் தடகள வீரர்கள் 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிவேகமாக பஸ்ஸை இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘நைஜீரியாவில் சாலைகளின் நிலைமை மோசமாக இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறி டிரைவர்கள் செயல்படுவதால் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நைஜீரியாவில் நடந்த 9,570 சாலை விபத்துகளில் 5,421 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Readmore: Gold Rate: மாத தொடக்கத்தில் அதிர்ச்சி தந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?