Nigeria: நைஜீரியாவில், சுமார் 300 பள்ளி மாணவா்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. இந்த நாட்டின் வடமேற்கு நகரமான கடுனா மாகாணத்தின் குரிகாவில் கடந்த 9ம் தேதி 280க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குரிகாவை உள்ளடக்கிய கடுனா மாகாணத்தின் ஆளுநரான உபா சானியும் இத்தகவலை உறுதிப்படுத்தியிருந்தார். துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், அப்பள்ளிக்குள் […]

நைஜீரியாவின் மன்ஷு கிராமத்தில் இரண்டு கும்பலை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆயுத தாக்குதலில் 113 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடமத்திய மாகாணமாக பிளாட்டியூ உள்ளது. அங்குள்ள மன்ஷு கிராமத்தில் இருவேறு கும்பல்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடு கோஷ்டி மோதலாக உருவானது. இரண்டு கும்பலை சேர்ந்த நூற்றக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கையில் கிடைத்த ஆயுதங்களை பயன்படுத்தி […]

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் தான் இந்த பயங்கரமான விபத்து நடந்திருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் பயணிகள் ரயில் ஒன்று பேருந்துடன் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் பேருந்து பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது. இதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரிய நாட்டின் லாகோஸ் நகரில் […]