தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதனால், அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, அவர் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த நிலையில், அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், உதயநிதிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : “இந்த தேதிகளில் ரேஷன் கடைக்கு போகாதீங்க”..!! மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!