நடிகர் ரஜினி முதல் ஐஸ்வர்யா ராய் வரை.. எந்தெந்த பிரபலங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது தெரியுமா..?

temple 1

இந்தியாவில் ஆன்மீகம் என்பது ஒருபுறம் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடித்தளமாக இருந்தாலும், மற்றொரு புறம் பக்தியின் உச்சக்கட்டம் – உணர்வுகளின் வடிவம் என்ற வகையிலும் நிகழ்கிறது. சில நேரங்களில் இந்த உணர்வுகள், ஒரு மனிதரைத் தெய்வமாக வணங்கும் நிலைக்கு கூட அழைத்துச் செல்லும். இதன் விளைவாக தான், இன்று சினிமா, விளையாட்டு மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்காக, ரசிகர்களே கோவில்கள் கட்டும் நிலைக்கு வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரமலமான எந்தெந்த பிரபலங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


குஷ்பு: பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு சுந்தர். வட இந்தியாவை விட தென்னிந்தியாவிலேயே இவருக்கு தீவிர ரசிகர் கூட்டம் உள்ளது. சினிமாவில் உச்சத்தில் இருந்த போது பல ஆண்டுகளுக்கு முன்பே இவருக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி விட்டார்கள். சினிமாவில் குஷ்புவின் பங்கினை கெளரவிக்கும் விதமான இந்த கோவில் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் கட்டி உள்ளனர்.

ஸ்ரீதேவி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக கனவு கன்னியாகவும், பெண் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்தவர். தனது விளையாட்டு தனமான, அதே சமயம் உணர்ச்சி பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். இவரது நினைவாக மும்பையில் இவருக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். அவரது அழகிய நடிகை நினைவுப்படுத்தவும், சினிமா பாரம்பரியத்தை போற்றவும் இந்த கோவிலை ரசிகர்கள் கட்டி உள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்: அழகுக்கு மறுபெயர் ஐஸ்வர்யா என அனைவரின் மனதிலும் அழகாலும், தனது புத்திசாலித்தனத்தாலும், திறமையாலும் இடம் பிடித்தவர். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. சினிமா துறையில் இவரின் சாதனைகள், ரசிகர்கள் இவர் மீது கொண்ட அபிமான ஆகியவற்றின் அடையாளமாக மங்களூருவில் இவருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும், அனைத்து வயதிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் மனதில் அவர் எந்த அளவிற்கு அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் என்பதற்கு, பெங்களூருவில் அவருக்கு கட்டப்பட்டுள்ள கோவிலே சாட்சி. இந்த கோவிலின் பிரம்மாண்ட அமைப்பு மற்றும் தினமும் நடத்தப்பட்டு வரும் பூஜைகள் உள்ளிட்டவைகள் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்கள் வைத்துள்ள அளவு கடந்த மதிப்பையும் அபிமானத்தையும் காட்டுகிறது.

Read more: OMG..! ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்.. சவரன் ரூ.9 ஆயிரத்தை கடந்தது..!!

Next Post

தினமும் 3 வேளை உணவு பழக்கம் எங்கிருந்து வந்தது?. ஏன் வந்தது தெரியுமா?.

Tue Jun 3 , 2025
உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உணவு சாப்பிடுகிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலைத் தருவது உணவு. இந்த ஆற்றல், உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதன் மூலமே நமக்குக் கிடைக்கிறது. இந்த ஆற்றலினால்தான் உடல் இயங்குகிறது. மனம் சிந்திக்கிறது, செயல்படுகிறது. எனவே, நமது வாழ்வையே தீர்மானிக்கும் உணவைப் பற்றி நமது முன்னோர்கள் கூறும் நம்பிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம். காலை, இரவு என்று […]
3 time food habit 11zon 1

You May Like