பெரும்பாலும் நிறைய பேர் சந்தையிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். கொஞ்சம் பெரிய குடும்பமாக இருந்தால் மொத்த காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்து நம்மால் கட்டாயமாக ஸ்டோர் செய்ய முடியாது. அதே சமயம் வாங்கிய காய்கறிகளும் சுருங்காமலும் கெட்டுப் போகாமலும், வாடாமலும் பிரஷ்ஷாக இருக்க அந்த காய்கறிகளை எப்படி ஸ்டோர் செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
நம்முடைய வீட்டில் கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இப்படிப்பட்ட கிழங்குகளை வாங்கி வைப்போம். அதை சில நாட்கள் கழித்து சமைக்கலாம் என்று அப்படியே விட்டுவிடுவோம். சில சமயம் அந்த கிழங்கு சுருங்கி கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்லெண்ணையும் மஞ்சளையும் கரைத்து ஒரு பேஸ்ட் போல தயார் செய்து, அந்த கலவையை கிழங்கின் மேலே நன்றாக தடவி, இதன் மேலே ஒரு நியூஸ் பேப்பரைப் போட்டு அப்படியே சுருட்டி ஸ்டோர் செய்தால் இந்தக் கிழங்கு ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.
இதேபோலத் தான் வாங்கிய பச்சை மிளகாய்களை காம்பை நீக்கிவிட்டு, அந்த பச்சை மிளகாயில் இந்த நல்லெண்ணெய் மஞ்சள் தூள் கலந்து பேஸ்டுடன் போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும். இந்த பச்சை மிளகாய்களை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து சுருட்டி, ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் ஃபிரிட்ஜ் இல்லாமலேயே. மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவைகளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃ ப்ரிட்ஜில் வைத்தால் பல நாட்களுக்கு புதிதாகவே இருக்கும். ஃ ப்ரிட்ஜில் காய்களை பருத்தித் துணிகளில் சுற்றி வைத்தால் கறிகாய்கள் சீக்கிரமாக வாடிப்போகாது. வீட்டுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து இருந்தால் பெயிண்ட் வாடை இருந்துகொண்டே இருக்கும். ஒரு வெங்காயத்தை நறுக்கி அறையின் மத்தியில் வைத்துவிட்டால் பெயிண்ட் வாடை வீசாது.
Readmore: கன்னட மொழி சர்ச்சை.. கர்நாடகாவில் தக்லைஃப் படம் ரிலீஸ் ஆகுமா? உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்..