வீட்டில் ஒட்டடைகளை இந்த நாட்களில் சுத்தம் செய்யக்கூடாது!. மகாலட்சுமி வீட்டில் தங்கமாட்டாள்!.

ottatai house 11zon

நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யும் சில விஷயங்கள் கூட தடுமாறுவது உண்டு. அப்படி இருக்க நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் வீட்டில் நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எதிர்மறை அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பணத்தை கொடுக்க கூடாது. 6 மணிக்கு மேல் வீட்டை கூட்டக் கூடாது என்று நேரத்திற்கும் கூட கால வரையறை உண்டு.


அதிகாலையில் எழுந்தால் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். இப்படி நேரம் மற்றும் காலம் பார்த்து நாம் செய்யும் சில விஷயங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ‘நாளும், கோளும் நமக்கு செய்யாதது, வேறு யார் செய்வார்?’ என்கிற பழமொழி ஜோதிடத்தில் உண்டு. அந்த பழமொழியில் இருப்பது போல் நேரம் நமக்கு நல்ல நன்றாக இருந்தால் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால் கூட நமக்கு ஒன்றுமே ஆகாது. நேரம் நன்றாக இல்லை என்றால் கல் தடுக்கி கூட இறந்து போய்விடலாம்.

இவ்வகையில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் வீட்டை ஒட்டடை அடித்தால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியானவள் வாசலோடு சென்று விடுவாள் என்கிற ஐதீகம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் மட்டுமல்ல, ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி ஆகிய விரத தினங்களில் கூட வீட்டை ஒட்டடை அடிக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றி இந்த நல்ல நாட்களில் வெளியில் வீசினால் செல்லப் போவது குப்பை மட்டுமல்ல, உங்கள் வீட்டில் தங்கி இருக்கும் மகாலட்சுமியும் கூட தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

விரதம் இருக்கும் நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை அவமதிப்பதற்கு சமமாகும் எனவே நீங்கள் விரத நாட்களில் விரதம் இருந்தாலும், இல்லை என்றாலும் வீட்டை சுத்தம் செய்வதற்கு அந்த நாட்களை மட்டும் தவிர்த்து விடுங்கள். தினமும் கூட்டி பெருக்கும் பொழுதே சுவற்றில் இருக்கும் லேசான ஒட்டடைகளை தட்டி எடுத்து விடலாம். இல்லை என்றால் இந்த நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் ஒட்டடை அடிக்கலாம்.

அதே போல வெள்ளிக்கிழமையில் குளியலறை மற்றும் கழிவறையை கட்டாயம் சுத்தம் செய்யக்கூடாது என்கிற நியதியும் உண்டு. வெள்ளிக்கிழமையை தவிர மற்ற நாட்களில் இவற்றை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் இவற்றை சுத்தம் செய்தால் வந்த மகாலட்சுமி வீட்டோடு தங்காமல் வெளியில் சென்று விடுவாள். இதனால் குடும்பத்தில் வறுமையும், வருமான பற்றாக்குறையும் ஏற்படும்.

Readmore: “எல்லாம் பண்ணிட்டு இப்போ மட்டும் பிடிக்கலையா”..? விலகிய காதலனுக்கு வேட்டு வைத்த காதலி..!! ஒரே ஒரு ஃபோட்டோவால் மொத்தமும் போச்சு..!!

KOKILA

Next Post

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று!. கல்லக்குடியிலிருந்து கல்லறைவரை; இடைவிடாத போராட்டத்தின் கதை!

Tue Jun 3 , 2025
முத்துவேல் கருணாநிதி என்ற ஒரு பெரும் வரலாறு, ஒரு தலைமுறையின் அடையாளம் . இதுவரை எந்த அரசியல்வாதியும் நிகழ்த்தாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் மறைக்கமுடியா உதய சூரியனாய் ஜொலித்தவர் கலைஞர் என்றால் எதிர் அரசியல் புரிபவர்களும் கூட ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்கான போராட்டங்களில் துவங்கி மக்கள் நலன் காக்கும் முதலமைச்சர் வரை அவர் சொன்னதும், செய்ததும் பல. நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்குவளை பகுதியில் ஜூன் 3 , […]
Kalaignar Karunanidhi 11zon

You May Like