சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக இன்று அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு 4-வது சா்வதேச மாரத்தான் போட்டி இன்று காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டி 5 கி.மீ., 10 கி.மீ., 21.1 கி.மீ., 42.2 கி.மீ. ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறுகிறது. அனைத்துப் பிரிவுகளும் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது.
இந்த நிலையில் சென்னையில் மாரத்தானில் பங்கேற்போர் வசதிக்காக இன்று அதிகாலை 3.40 முதல் சிறப்பு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மாரத்தானில் பங்கேற்போர் இன்று அதிகாலை 3.40 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கட்டணம் இன்றி பயணிக்கலாம்.