பாமக சார்பில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று ராமதாஸை கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் எடுத்து பாமக வழிநடத்த இருப்பதாகவும், அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் இருவருக்கு மத்தியில் சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
பாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், புதிதாக நியமிக்கவும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை இருப்பதாக அன்புமணி பேசியிருந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், போட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்காகவே புதிய நிர்வாகிகளை நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவின் பொதுக்குழுவை கூட்டி மிக முக்கிய மாற்றங்களை கொண்டு வர ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரை நீக்கியதற்கு பின்னணியிலும் இதே காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, பாமக நிர்வாகிகள் பலரும் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அடுத்ததாக பாமகவில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.