இந்த விரலில் மோதிரம் அணியவே கூடாது!. எந்த விரலில் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் ?

ring 11zon

நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள்.


உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் நமது பாதத்தில் சென்று முடிவடைகிறது. இதில் பெண்களின் கர்ப்பப் பையுடன் தொடர்புடைய முக்கியமான நரம்பு காலின் இரண்டாவது விரலில் சென்று முடிகிறது. இந்த விரலில் சிறிது அழுத்தம் கொடுப்பதன் மூலம் கர்ப்பப்பை வலுவடையும். இதனால் தான் பெண்களின் உடலில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் காலங்களான பருவமடையும் காலம் மற்றும் திருமணத்திற்கு பின் காலில் மெட்டி கட்டாயம் அணிய வேண்டும் என வைத்தனர்.

இதே மோதிரம் அணிவதற்கும் இந்த விரலில் தான் அணிய வேண்டும் என முறை உள்ளது. மோதிரம் அணிவதன் மீதான ஆசை காரணமாக கையில் உள்ள அனைத்து விரல்களிலும் பலரும் மோதிரம் அணிந்து கொண்டாலும், இரண்டாவது விரலை மட்டும் தான் மோதிர விரல் என்கிறோம். அப்படி அந்த விரலுக்கு என்ன சிறப்பு, எந்த விரலில் மோதிரம் அணிந்தால், அதுவும் எந்த உலோகத்தால் மோதிரம் அணிந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்திலும் இடது கை மோதிர விரலில் தான் மோதிரம் அணியும் வழக்கம் உள்ளது. இடது கை மோதிர விரல் என்பது இதயத்துடன் தொடர்புடையது. அதனால் தான் காதல், அன்பின் வெளிப்பாடாக இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கும் பழக்கம் உள்ளது. நம்முடைய வலது கை உடலின் செயல்பாடுகளுடனும், இடது கை மனதின் செயல்பாடுகளுடனும் தொடர்பு கொண்டது.

கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஆற்றலும், ஆரோக்கியமும் மேம்படும். ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் ஒருவரின் ஆளுமை திறன் அதிகரிக்கும். சிறந்த வாழ்க்கையை தேடுபவர்கள் இந்த விரலில் மோதிரத்தை அணிந்து கொள்ளலாம். ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிவதால் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

நடுவிரலில் மோதிரம் அணியும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்த விரலில் மோதிரம் அணிவதால் வசீகரம் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மோதிர விரலில் மோதிரம் அணிவதால் வாழ்க்கை செல்வ செழிப்பாக அமையும். மோதிர விரலில் அணியும் மோதிரம் தங்கமாக இருக்க வேண்டும்.

இருப்பினும் நடுவிரலில் மோதிரம் அணிவதால் தந்தை மகன் இருவருக்குமிடையே பிரச்னைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்படி அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நடுவிரலில் மோதிரம் அணிபவர்களுக்கு கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்காது. எதிரெதிர் சக்திகளை கொண்டதை விரலில் அணிந்தால் இன்னல்களே ஏற்படும். ஆகவே நடுவிரலில் மோதிரம் அணிவது தவிர்க்கப்படுகிறது.

சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அது கஷ்டத்தை தரும். ஆரோக்கியத்தை பாதிக்கும். சுண்டு விரல் உணர்வுகளை அதிகரிக்கக் கூடியது. சுண்டு விரலில் மோதிரம் அணிய விரும்பினால் செம்பு உலோகத்தால் ஆன மோதிரத்தை மட்டும் அணியலாம். தங்கம் மோதிரம் அணியக் கூடாது. சுண்டு விரலில் மோதிரம் அணிவதால் இதய சக்தி ஓட்டம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தங்கம், வெள்ளி மோதிரங்கள் அணிவதை விட செம்பு மோதிரம் அணிவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் உள்ள நச்சுப் பொருட்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

Readmore: சாமி கும்பிடும்போது கண்ணீர் வருகிறதா?. என்ன அர்த்தம் தெரியுமா?

KOKILA

Next Post

கைம்பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு..! வரும் 12-ம் தேதி உறுப்பினர் சேர்க்கை முகாம்...!

Thu Jun 5 , 2025
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில்,உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் உறுப்பினராக சேரலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், […]
womens 2025

You May Like