மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா.
டெல்லி அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் தொடர்பான டெல்லி அவசர சட்ட மசோதா 2023 மீது, ராஜ்யசபாவில் திங்கள்கிழமை 131 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, இப்போது சட்டமாக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே-19 அன்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. மாநிலங்களவையில் நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது.