நார்வே நாட்டின் தனியுரிமை மீறல்களுக்காக மெட்டாவிற்கு ஒரு நாளைக்கு $98,500 அதாவது 1 மில்லியன் க்ரவுண்ஸ் ஆகஸ்ட் 14 முதல் அபராதம் விதிக்கும் என்று நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மெட்டா, உடல் ரீதியாக அடையாளம் காணப்பட்ட தனியுரிமை மீறல்களை நிவர்த்தி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மெட்டா பயனர்களின் இருப்பிடம் உட்பட பயனர் தரவை பெற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விளம்பரங்களை அனுப்புவதற்கு அதைப் பயன்படுத்த முடியாது. இது பெரும்பாலும் வருவாயை உருவாக்க தொழில்நுட்ப நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் நடைமுறையாகும் என்று நார்வே கட்டுப்பாட்டாளர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு ஆகஸ்ட் 4 வரை சிக்கலைத் தீர்ப்பதற்கும், கையாண்டதாக கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கவும் அவகாசம் அளித்தது. இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன” என்று சர்வதேச பிரிவின் தலைவர் டோபியாஸ் ஜூடின் கூறியுள்ளார். ஆனால், மெட்டா வழங்கப்பட்ட காலத்தை பயன்படுத்த தவறவிட்டதால் கண்காணிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அபராதம் நவம்பர் 3 வரை தொடரும்.