புதிய வாகனம் வாங்கும் அனைவரும் பொதுவாக கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனை அடுத்து வாகனத்தின் சக்கரத்தின் அடியில் எலுமிச்சை பழத்தினை வைத்து, அதனை வாகன சக்கரத்தால் நசித்து வாகனம் ஓட்டுவர். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. ஒரு எலுமிச்சை தான் வீணாகும்.
முன்பெல்லாம் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி, பொதி சுமக்கும் கழுதை போன்றவையே போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கு கால்நடைகளை பயன்படுத்துவதால் அவற்றின் கால்களில் கல்லோ அல்லது முற்களோ குத்தி காயங்கள், கிருமிகள் பெருகி சரியாகாத நிலை ஏற்படும்.
ஆனால், இதன் உண்மை காரணம் என்னவென்றால், முந்தைய காலங்களில் பெரும்பாலும் போக்குவரத்து என்றாலே அது மாட்டு வண்டி போக்குவரத்து தான். அப்படி மாடுகள் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது அதன் கால்களில் காயங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தொற்று கிருமிகள் ஏற்பட்டு மாடுகளின் உடல்நிலை பாதிக்கப்படலாம். இதனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன்பு மாடுகளின் நான்கு கால்களுக்கு அடியிலும் எலுமிச்சம் பழத்தை வைத்து மிதிக்க வைத்தார்கள். அவ்வாறு மிதிக்கும் போது எலுமிச்சம் பழத்தின் சாறு மாடுகளின் காலில் படும்போது அதில் உள்ள தொற்று கிருமிகள் அழிந்து காயங்கள் ஏதேனும் இருந்தால் விரைவில் ஆறிவிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன்பு எலுமிச்சம் பழத்தை பயன்படுத்தினார்கள்.
இந்த பழக்கம் நாளடைவில் மருவி மருவி சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைக்கும் பழக்கமாக மாறியது. அதை பின்பற்றி தான் நாமும் தற்போது வரை புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்கிறோம். அவ்வாறு எலுமிச்சம் பழத்தை சக்கரங்களுக்கு அடியில் வைத்து நசுக்கும் போது கண் திருஷ்டி கழிவதாகவும் மக்களால் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.
Readmore: அழகுக்கு மட்டுமல்ல; வெயிலுக்கு ஏற்ற காட்டன் புடவைகள்!. நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!.