2025 நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தேர்வை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
2025-ம் ஆண்டுகான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் அன்றைய தினம் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற மே 30-ம் தேதி, இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடப்பது நியாயமற்றது என்று கூறி ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த கால அவகாசம் வேண்டும் என்பதால் ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வை ஒத்தி வைப்பதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்தது. மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைப்பது, தேர்வுக்கான உட்கட்டமைப்பு மையம் அமைப்பது போன்ற வசதிகளை உருவாக்க அவகாசம் கோரி தேர்வு வாரியம் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் P.K. மிஸ்ரா மற்றும் A.G. மாசி ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீர்த்திமான் சிங், வாரியம் ஆரம்பத்தில் இரண்டு ஷிப்டுகளில் ஆன்லைன் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 450 மையங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், புதிய ஒற்றை-ஷிப்ட் உத்தரவுக்கு இணங்க, தடையற்ற Wi-Fi, வன்பொருள் ஆதரவு மற்றும் மின் காப்புப்பிரதி பொருத்தப்பட்ட பாதுகாப்பான தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் கூறினார்.
அனைத்து தளவாட மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு உயர் மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்று கோரிக்கை விடுத்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 3-ம் தேதி நீட் முதுகலை தேர்வை நடத்த அனுமதி வழங்கியது.
எனினும் எந்த காரணம் கொண்டு, மேலும் கால அவகாசம் வழங்கப்படாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. NEET PG என்பது MD/MS மற்றும் PG டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். சுமார் 2 லட்சம் பேர் இந்த தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.. மேலும் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கு NBE அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை (natboard.edu.in) தொடர்ந்து சரிபார்க்க மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : கூட்ட நெரிசல் வழக்கு!. ஆர்.சி.பி அதிகாரி உட்பட 4 பேர் கைது!. போலீசார் அதிரடி!.