மறைந்த நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் கொடுத்துள்ளார்.
மறைந்த நடிகர் ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு தான் போவாரம். சம்பவத்தன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜேஷுக்கு மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்துள்ளர். பின்னர், நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷின் மகனிடம் கூறியிருக்கிறார். பிறகே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸிலேயே உயிர் போனது.
இதுதான் அன்றைக்கு நடந்ததே தவிர, சித்த டாக்டர் பலமணி நேரம் பேசி கொண்டிருந்தார், சித்த மருந்துகளை சாப்பிட்டதால் ராஜேஷ் இறந்துவிட்டார் போன்ற வதந்திகள் பரவுகின்றனர். சித்த மருந்துகளை தொடர்புபடுத்தி இந்த மரணத்தை பேசுவது சரியில்லை. இது இயற்கையான மரணம்” என்று யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் சேனலுக்கு நடிகை வடிவுக்கரசி அளித்த பேட்டியில், ”ராஜேஷ் நல்லபடியாக வாழ்ந்து இறந்திருக்கிறார். சித்த மருந்து சாப்பிட்டதால் அவர் இறந்ததாக சொல்கிறார்கள். அவர் சித்த மருந்து சாப்பிட்டதை நீங்கள் பார்த்தீங்களா..? ஒரு ஜோதிடர் உண்மையானவரா என்பதை தெரிந்து கொள்ள தன்னுடையது என்று சொல்லாமலேயே தன்னுடைய ஜாதகத்தையே கொடுத்த பார்த்தவர் ராஜேஷ். அதில் ஓரளவுக்கு நம்பிக்கை வந்த பிறகு, அவரை பேட்டி எடுப்பார்” என்று பேசினார்.
அந்த பேட்டியில், ராஜேஷின் மகள் திவ்யா கண்ணீர் மல்க ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில், ”தவறான கருத்துடன் என்னுடைய அப்பா ராஜேஷ் மரணத்தை பற்றி சிலர் பேசியுள்ளார்கள். இது எங்களுக்கு வலியை கொடுக்கிறது. இதற்கு மேல் எதுவும் எங்களுக்கு தர வேண்டாம். அவருடைய கடைசி பயணத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய அனைவருக்கும் நன்றி.
அப்பாவை பற்றி எல்லாரும் பெருமையாக பேசுவதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம், அவரை பற்றி தவறாக பேசுவதை பற்றி கேட்க வேதனையாக இருக்கிறது. தயவு செய்து இனி அப்படி யாரும் பேச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.