தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாஜக..? இன்று அமித்ஷாவை சந்திக்கிறார் விஜய்..? திமுகவை வீழ்த்த இதுதான் வழி..!! பரபரப்பில் தமிழகம்..!!

Amit Shah Vijay 2025

ஜூன் 7ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கொள்கையை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் அறிவித்துள்ளார். அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜகவை விட, தமிழ்நாட்டை ஆளும் திமுகவையே கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியலில் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மக்களை நேரடியாக சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் தான், ஜூன் 7ஆம் தேதி தமிழகம் வரவுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “வரும் 7ஆம் தேதி அமித்ஷா மதுரைக்கு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். பின்னர், பாஜக கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து, வேலம்மாள் திடலில் மாநில, மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. அந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைத்து அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். தவெக தலைவர் விஜய்க்கு அந்த எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். இதற்கு முன்பு கூட ஒருமுறை சொல்லியிருந்தேன். அதற்கு பதில் இனிதான் வரும் என எதிர்பார்க்கிறேன்‌” என்றார். ஏற்கனவே, பாஜகவில் இருந்து விஜய்க்கு அழைப்பு போன்றதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : பணக்காரர்களாக மாறப்போகும் மத்திய அரசு ஊழியர்கள்..!! அடிப்படை சம்பளமே ரூ.51,480..!! அமலாகிறது 8-வது ஊதியக்குழு..!!

CHELLA

Next Post

இனி 30 நாட்களுக்குள் பட்டா... தமிழக அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் பாராட்டு...!

Sat Jun 7 , 2025
30 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது […]
chidambaram 2025

You May Like