பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ரேஷன் கடை பாமாயிலில் அதிக கொழுப்பு இருப்பதால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். உடல் எடை கூடுதல், கொழுப்பு சத்து அதிகரிப்பு, இதயம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பயன்படுத்தும் போது அதை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் இதில் நமக்கு அதிக நன்மைகள் நிறைந்துள்ளது.
பாமாயில் சுத்தம் செய்வது எப்படி? அடுப்பை மிதமான தீயில் வைத்து அதன் மீது ஒரு இரும்பு வாணலியை வைத்து கொள்ளுங்கள். இதில் பாமாயில் ஊற்றிவிடுங்கள். எண்ணெய் சூடாகும். இன்னொரு புறம் கொட்டை நீக்கிய புளி, கல் உப்பு, ஒரு சின்ன துண்டு இஞ்சி ஆகியவை எடுத்து கொள்ளுங்கள். புளியை உருண்டையாக எடுத்து அதன் நடுவில் உப்பை நிரப்புங்கள்.
புளிக்குள் இருக்கும் கல் உப்பு வெளியில் வராதபடிக்கு நன்கு உருட்டிக் கொள்ளுங்கள். இந்த புலியை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெய்யில் போடுங்கள். சிறிது நேரம் கழித்து சின்ன துண்டு இஞ்சியையும் எண்ணெயில் போட்டு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் சூடாக விடுங்கள். எண்ணெயில் புளி போடும்போதும், இஞ்சி போடும்போதும் பொறியும். அது அடங்கிய பின்னர் எண்ணெய்யை இறக்கி ஆறவையுங்கள். பின்னர் வடிகட்டி பாட்டிலில் ஊற்றுங்கள். இப்போது எண்ணெயின் நிறம் மாறியிருக்கும்.
பாமாயிலில் உள்ள பித்தம் எல்லாவற்றையும் புளியும் இஞ்சியும் உறிஞ்சி விடும். இதனால் ரேஷன் கடை பாமாயில் தற்போது பயன்படுத்துவதற்கு ஆரோக்கியமான முறையில் தயாராகி விட்டது. பாமாயில் புகை வரும் அளவிற்கு காய்ச்சும் போது அதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் மிதமான தீயில் கவனமாக காய விடுங்கள்.
Read more: ஜோதிடப்படி.. கணவர் வேலைக்கு வெளியே சென்றவுடன்.. மனைவி இதைச் செய்யக்கூடாது..!!