இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி..!! திடீரென அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி..!! என்ன காரணம்..?

Edappadi Palanisamy 2025

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வியூகம் வகுப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், நீக்கம், நிர்வாகிகளுடன் ஆலோசனை, கூட்டணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில் தான், தென் மாவட்டங்களை குறிவைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புது வியூகம் வகுத்து வரும் நிலையில், மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா, அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து இவர், அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

அதிமுகவில் இருந்து விலகிய ஆர்யா, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மேலும், சொந்த காரணங்களுக்காக அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி.உதயகுமாருக்கு தனித் தனியாக கடிதமும் எழுதியுள்ளார். கட்சியில் தீவிரமாக பணியாற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால், இபிஎஸ் அதிர்ச்சியில் உள்ளார்.

Read More : கொங்கு மண்டலத்திற்கு வந்தால் கொலை..!! சென்னைக்கு போனால் கூலிப்படையை ஏவி கொலை..!! நிம்மதியே இல்ல..!! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு..!!

CHELLA

Next Post

தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை.. வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழகம்...? பாமக அன்புமணி ராமதாஸ் கேள்வி..‌!

Mon Jun 9 , 2025
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை. வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த சீத்தம்பூண்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி  நேற்றிரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தோட்டத்து வீடுகளில் தனியாக வாழும் மக்கள் […]
anbumani 2025

You May Like