14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!! அக்காவை தேடிப் போன 13 வயது சகோதரியையும் நாசம் செய்த 4 இளைஞர்கள்..!!

Rape 2025 2 1

திருமண வீட்டிற்கு சென்ற சகோதரிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர்கள் 13, 14 வயதுடைய இரண்டு சகோதரிகள். இவர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு, 14 வயதுச் சிறுமிக்குத் தெரிந்த ஒரு இளைஞர் வந்துள்ளார். அப்போது, சிறுமியின் அவர் பேசி, நைசாக ஆள் நடமாட்டாம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞன், தன்னுடைய 3 நண்பர்களையும் அங்கு வரவழைத்து, அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே, தனது அக்காவை காணவில்லை என்ற 13 வயது சிறுமி தேடிச் சென்ற நிலையில், அந்த 4 இளைஞர்களும் சேர்ந்து அவரையும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இந்த சம்பவத்தால் பயந்துபோன சகோதரிகள் இருவரும் அன்று உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

பின்னர், மறுநாள் மீண்டும் வந்த அந்த 4 பேரும் சிறுமிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று 2-வது நாளாக வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களில் ஒருவன், சிறுமிகளை அவர்களது சொந்த ஊரில் விட்டுச் சென்றுள்ளான். பின்னர், சிறுமிகளின் தாயார் எங்கு சென்றீர்கள் என்று கேட்டபோதுதான், நடந்த சம்பவத்தைப் பற்றி அவருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர், உடனே குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில், இளைஞர்கள் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Read More : “தவெகவில் இணைந்தது ஏன்”..? “எல்லா கட்சிகளையும் பார்த்துட்டோம்”..!! ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ் பரபரப்பு பேட்டி..!!

CHELLA

Next Post

டிரம்புக்கு எதிரான போராட்டம்: நேரலையில் பேசிய செய்தியாளரை ரப்பர் தோட்டாவால் தாக்கிய போலீஸ்..!!

Mon Jun 9 , 2025
குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]
australian journalist 1

You May Like