குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி, போராட்டத்தின்போது அமெரிக்க காவல் துறை பயன்படுத்திய ரப்பர் தோட்டாவால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் நேரடி ஒலிபரப்பில் பதிவானது.
நைன் நியூஸ் சேனல் நிருபராக பணியாற்றும் டோமாசி, LAPD (லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை) மற்றும் தேசிய காவல்படை அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான வன்முறை மோதலின் போது தாக்கப்பட்டார். போராட்டம் அமெரிக்க குடியேற்றத்துக்கு எதிரான போராட்டம் 257 E டெம்பிள் ஸ்ட்ரீட்டில் ICE அலுவலகம் அருகே நடைபெற்றது.
ரப்பர் தோட்டா தாக்கியபோதும், ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி பார்வையாளர்களுக்கு “நான் நன்றாக இருக்கிறேன்” என்று நேரடி ஒலிபரப்பில் பகிர்ந்து கொண்டார். இது அவரின் பொறுப்பும், தொழில்முறை மனப்பான்மையும் காட்டியது. டோமாசியும் அவரது கேமரா ஆபரேட்டரும் இதுவரை பாதுகாப்பாக உள்ளனர் என்று நைன் நியூஸ் நிறுவனம் உறுதி செய்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களின் பாதுகாப்பு மற்றும் செய்தி அறிய உரிமை ஆகியவை முக்கியம் என்பதை நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலிய அரசியல் கவலைக்குரியதாக அமைந்துள்ளது. கிரீன்ஸ் கட்சி செனட்டர் சாரா ஹான்சன்-யங், அமெரிக்க நிர்வாகத்திடம் விரைவான விளக்கம் கோரியுள்ளார். அதேபோல், பிரமர் அந்தோணி அல்பானீஸுக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read more: கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கப்பலில் தீ விபத்து.. 4 பேர் காணவில்லை..!!