தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம், பிபிடி என மருத்துவம் சார்ந்த 19 படிப்புகள் உள்ளன. இதற்கான, பொதுப் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கியது. தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இன்று காலை 10 மணி முதல் 18ஆம் தேதி மாலை 5 மணி வரை கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 17 வரை இட ஒதுக்கீடு செயல்முறை நடைபெறும். இரண்டாவது சுற்றுக்கான இட ஒதுக்கீடு முடிவு ஆகஸ்ட் 18ம் தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் மாநில ஒதுக்கீட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நீட் தேர்வு எழுதிய சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.