TNPL: ஷாரூக் கான் அரைசதம் வீண்…! முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை அணி..!

tnpl madurai vs kovai

கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்த 9வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மதுரை அணி.

டி.என்.பி.எல். (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 8வது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்றைய தினம் மோதின.


இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர்களான ஜிதேந்திர குமார் 17 ரன்களிலும், சுரேஷ் லோகேஷ்வர்20 ரன்களிலும் அவுட் ஆகினர். ஒருபுறம் ஷாருக் கான் நிலைத்து நிற்க மறுபுறம் வந்த ஜிதேந்திர் 17 ரன், லோகேஷ்வர் 20 ரன் எடுத்துவிட்டு அவுட் ஆகினர். தொடர்ந்து வந்த சச்சின் (15), ஆண்ட்ரே சித்தார்த் (20), மாதவ் பிரசாத் (4) ஆகியோரும் வெளியேறினர்.

நிதானமாக விளையாடி ஷாரூக் கான் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்த பிரதீப் விஷால் 11 ரன்கள் எடுத்தார். கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிரடி வீரர் ஷாரூக் கான் அதிகபட்சமாக 44 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை அணி சார்பில் பந்துவீசிய விக்னேஷ், முருகன் அஸ்வின், சூர்யா ஆனந்த், சரவணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

170 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியின் வீரர்கள் ராம் அரவிந்த் மற்றும் பாலசந்தர் அனிருத் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். இதில் பாலசந்தர் அனிருத் 28 பந்துகளில்38 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். இதனையடுத்து ராம் அரவிந்துடன் ஜோடி சேர்ந்தார் சத்ருவேத். இருவரும் அதிரடியாக விளையாடினர். ராம் அரவிந்த் 48 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அவரை அடுத்து களமிறங்கிய அதீக் உர் ரஹ்மான் 7 (2) ரன்னில் ரன்அவுட் ஆனார். சத்ருவேத் 23 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் மதுரை அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சேர்த்தார். கோவை கிங்ஸ் அணி சார்பாக பந்துவீசிய ஷாருக் கான் மற்றும் கபிலன் ஆகியோர் தல ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மதுரை பாந்தர்ஸ் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து இந்த தொடரின் முதல் வெற்றியை ருசித்தது.

Read More: ஐ.சி.சி. ‘டி-20’ தரவரிசை!. திலக் வர்மா அசத்தல் முன்னேற்றம்!. சூர்யகுமார் யாதவ் பின்னடைவு!

Newsnation_Admin

Next Post

ஆபரேஷன் ஹனிமூன் கொலை!. சோனமின் சூட்கேஸில் கிடைத்த துப்பு!. தாலி, மோதிரம் எப்படி போலீசாருக்கு உதவியது?.

Thu Jun 12 , 2025
மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கிடைத்த தாலி மற்றும் மோதிரத்தின் மூலம் முதல் துப்பு போலீசாருக்கு கிடைத்தது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த […]
mehalaya sonam murder case

You May Like