ஆதார் இருந்தால் போதும்… நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 % மானியம்…! முழு விவரம்

hen subcidy 2025

நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு 50 விழுக்காடு மானியத்துடன் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவும் திட்டத்தின் கீழ் 10 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1.65,625/- மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பு தொகை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் மேற்கொள்ளப்பட வேண்டும். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட / பழங்குடியினருக்கு 30% ஒதுக்கீடும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50 விழுக்காடு மானிய விலையில் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா / அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி. 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரரும் அவருடைய குடும்பத்தினர் எவரும் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பித்தினை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறையை அணுக வேண்டும்.

Read more: சினிமா பாணியில் சேஸிங்.. மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்..!!

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! நிலக்கடலை கொள்முதல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு...! மத்திய அரசு ஒப்புதல்

Fri Jun 13 , 2025
2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு […]
kharif season farmers 11zon

You May Like