தினமும் சாப்பிடும் சில உணவுகள்… மீண்டும் சூடேற்றினால் நஞ்சாக மாறும்..!! – மருத்துவர் எச்சரிக்கை

reheat

மனிதனுக்கு உணவு என்பது உயிர்வாழ்வுக்கே அடிப்படை. அந்த உணவை சம்பாதிக்கவே நாம் பல வேலைகளைச் செய்து வருகிறோம். ஆனால் நம்மால் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவையா? என்பது பற்றி பலர் சிந்திக்க மறக்கிறோம்.


இப்போது பலரின் வாழ்க்கை முறை அவசரமானதாகிவிட்ட நிலையில், காலை அல்லது மாலை உணவை அதிக நேரம் செலவழிக்காமல், முன்பே சமைத்து வைத்ததை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் பழக்கம் உருவாகியுள்ளது. ஆனால் இப்படி செய்வதில் சில உணவுகள் மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனைகள் உருவாகக்கூடும் என்றும், அவற்றை தொடர்ந்து செய்வது நஞ்சுப் பாதிப்புகளை கூட ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவர் ஏகம்மை மணிகண்டன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் அது நச்சுச் சேர்க்கையாக மாறும் என்றும், அதனால் வயிற்றுப் பாதிப்பு, செரிமானக் கோளாறுகள் மற்றும் சில நேரங்களில் புற்றுநோய் வரலாம் என்றும் கூறியுள்ளார்.

சாதம்: சமைத்த சாதத்தில் பேசில்லஸ் சிரியஸ் என்னும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருக்கும். இப்படி சமைத்த சாதத்தை சரியான முறையில் மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல், மீண்டும் சூடுபடுத்தினால், ப்ரைடு ரைஸ் சிண்ட்ரோம் என்னும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனையால் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வேறு சில செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சமைத்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட நினைத்தால், அதை முறையாக மூடி உடனே ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் தேவையான போது வெளியே எடுத்து, சாதத்தை ஒருமுறை கிளறிவிட்டு, பின் சூடேற்றி சாப்பிட்டால், எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று டாக்டர் கூறினார்.

உருளைக்கிழங்குகள்: வேகவைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால், அது புடுலினம் நஞ்சை உருவாக்கும். இது மிகவும் ஆபத்தானது. இது செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதுதவிர தசைகளையும் பாதிக்கும். ஒருவேளை வேக வைத்த உருளைக்கிழங்கை பிறகு பயன்படுத்த விரும்பினால், அதை உடனே ஒரு கண்டெய்னரில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பின் தேவையான போது எடுத்து சூடுபடுத்தினால், அது நஞ்சாக மாறாது என்று டாக்டர் கூறினார்.

கீரை வகைகள்: பசலைக்கீரை மற்றும் பிற கீரைகளில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இவற்றை சமைத்த பின் மீதும் சூடேற்றும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, பின் நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்கும். அதே சமயம் பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடைந்துவிடும். எனவே பசலைக்கீரை மற்றும் வேறு எந்த கீரைகளையும் சூடேற்றக்கூடாது.

உணவின் மீது கவனம் செலுத்துவது, மருத்துவ செலவுகளைத் தவிர்க்கும் முதல் வழி.
மீண்டும் சூடேற்றும் பழக்கத்தை தவிர்த்தால், ஆரோக்கிய வாழ்க்கைக்கு முதல் படி எடுக்கலாம். இதுவரை நீங்கள் இந்த உணவுகளை பலமுறை சூடுபடுத்தி சாப்பிட்டு வந்திருந்தால், இனிமேல் அவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட நினைத்தால், அவற்றை முறையாக சேமித்து, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, பின் எடுத்து சூடேற்றுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் சமைத்த கீரைகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.

Read more: நாட்டை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து: முன்பே கணித்த ஜோதிடர்.. வைரலாகும் பதிவு..!!

Next Post

ஈரான் - இஸ்ரேல் பதற்றம்!. பயணத்தை தவிருங்கள்; விழிப்புடன் இருங்கள்!. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்!.

Fri Jun 13 , 2025
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. “தற்போதைய பிராந்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இஸ்ரேலிய […]
iran israel war indian embassy

You May Like