புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.1560 உயர்ந்ததால் ஷாக்கில் நகைப்பிரியர்கள்..

Traditional Gold Jewellery Collections

சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது..

அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 195 உயர்ந்து, ரூ.9,295க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள், சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

RUPA

Next Post

ஏர் இந்தியா விபத்து : பலி எண்ணிக்கை 297 ஆக உயர்வு.. காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நேரில் ஆறுதல்..

Fri Jun 13 , 2025
As the death toll in the Air India plane crash rose to 297, Prime Minister Modi personally met the relatives of the injured and offered his condolences.
hmvh4vhk ahmedabad plane crash 160x120 13 June 25 1

You May Like