மகளிர் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா சமீபத்தில் லோக்சபாவில் வாக்கெடுப்புக்கு வந்தது. இந்த மசோதா பெண்களுக்கு சட்டமன்றங்களில் அதிகமான இடத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது.
வாக்கெடுப்பில் மொத்தம் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், 211 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தோல்வி அடைந்துள்ளது.
ஆதராவாக 278 வாக்குகள் இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தா மசோதா என்பதால் இதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும், அதாவது மொத்தம் இருக்கும் 489-ல் 3ல் 2 பங்கு என்ற கணக்குப்படி 326 ஆதரவு வாக்குகள் தேவை. ஆனால் இதற்கு ஆதரவாக 278 வாக்குகள் மட்டுமே உள்ளதால், இந்த மசோதா முறைப்படி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


