வரும் 21-ம் தேதி முதல் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பில் காலியாக உள்ள 9820 இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் என தெரிவித்துள்ளார்.