தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும், வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்ய முகாம்கள் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை செயல்பட்டு வருகிறது.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726 (ரூ 615+GST ரூ.111) செலுத்தி இந்த சிறப்பு முகாம் மூலம் பெயர் மாற்றம் செய்யலாம். விண்ணப்பதாரர் கீழே தெரிவித்துள்ள ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
பெயர் மாற்றத்திற்கு நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி ரசீது நகல் அல்லது விற்பனைப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் அல்லது ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம் இருந்தால் போதுமானது.
வீட்டில் யாராவது இறந்துவிட்ட காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், செட்டில்மென்ட் பத்திரம் அல்லது பகிர்வு பத்திரம் சமர்ப்பிக்க தவறிவிட்டாள், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழின்படி அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பெயர்களிலும் பெயர் மாற்றம் செய்யப்படும்.
கூட்டுக் குடும்பமாக உள்ளவர்கள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்; பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், வளாகம், அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற, விண்ணப்பத்தில் கையொப்பமிட குடியிருப்பவர்கள் இடமிருந்து அதிகாரப்பூர்வ கடிதம் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.