அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற புதிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் பரவ தொடங்கி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமாக அமைந்தது. உலக வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு விஷயமாக இந்த கொரோனா பெருந் தொற்று மாறியது. பின்னர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு நோய் பரவல் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவிய வண்ணம் இருக்கிறது.
ஜூன் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து இருக்கிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 109 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் ஏழு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் .இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்திலும் மகாராஷ்டிராவிலும் தான் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் 35 பேரும் மகாராஷ்டிராவில் 29 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த உயிரிழந்துள்ளனர். தொற்று அதிகரிக்கும் விகிதம் குஜராத், டெல்லி , கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் 6,836 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் 14,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில், உருமாறிய, ‘ஒமைக்ரான்’ வகையை சேர்ந்த, ‘நிம்பஸ்’ எனப்படும், என்.பி.1.8.1 என்ற வைரஸ் தற்போது பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகம் பரவி வருவதாக கூறப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட குறைந்தது, 13 அமெரிக்க மாகாணங்களில் நிம்பஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் மே மாத இறுதி வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில், 10 சதவீதம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆசியாவின் சில பகுதிகளில், குறிப்பாக சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன. இந்தியாவில், கொரோனா இறப்பு, 100ஐ தாண்டிஉள்ளது. ஆனால், ‘நிம்பஸ்’ வகை தொற்று இதுவரை இங்கு கண்டறியப்படவில்லை. இந்த வகை வைரஸ் உயிரைக் கொல்லும் அபாயத்தை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிம்பஸைத் தவிர, எக்ஸ்.எப்.ஜி., என்ற திரிபு வைரசும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது