பாமக தலைவர்களுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி.. கௌரவ தலைவர் ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதி..

pmk arul 1 2025 06 5ba9da01759236f7d459910c92ed7734 1

பாமக தலைவர்கள் இருவர் நெஞ்சுவாலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் இன்று காலம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் தலைவர் ஜி.கே மணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


சேலம், தருமபுரியில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ள நிலையில் பாமக தலைவர்கள் அடுத்தடுத்து நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜி.கே மணி கலந்து கொள்ளாத நிலையில், தற்போது நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

பாமகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்து வரும் ராமதாஸ் தனது மூச்சு இருக்கும் வரை கட்சியின் தலைவர் நான் தான் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனினும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அன்புமணி கூறியிருந்தார்.

RUPA

Next Post

உங்க PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..? ஒரே ஒரு மிஸ்டுகால் போதும்.. ஈஸியாக தெரிஞ்சுக்கலாம்..

Wed Jun 18 , 2025
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வைப்பு நிதி (PF) கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஈபிஎஃப்ஒ (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பு ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக UAN (Universal Account Number) வழங்கப்படுவது வழக்கம். இந்த UAN எண்ணின் கீழ் தான் PF பணம் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. பொதுவாக, ஊழியர்கள் ஓய்வு வாழ்க்கைக்காக PF தொகையை சேமிக்கின்றனர். ஆனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட […]
PF Balance Check 1

You May Like