கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். உடனே போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர்.
போலீசார் கூறியதாவது, ரவுடி தமிழரசனை கைது செய்ய சென்ற போது, அவர் போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயன்றார். இதையடுத்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் பென்சில் தமிழரசனின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர், காயமடைந்த அவரை போலீசார் கைது செய்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இவரது கூட்டாளிகளான பிரகாஷ், மனோஜ், ஹர்ஹரன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பென்சில் தமிழரசன், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என்றும், போலீசாரிடம் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. “போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் தற்காப்பு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,” என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். . சென்னையிலும் 5 ரவுடிகள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read more: 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடி…!