இதுக்கு ஒரு எண்டே இல்லையா.. தங்கம் விலை இன்றும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

necklace33 2 800x445 1

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது..

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை காணப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.. அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் 3,000 வரை தங்கம் விலை உயர்ந்தது..

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று குறைந்தது. அதன்படி, சென்னையில் 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்தது.

அதன்படி சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.74,000 விற்பனையானது. அதே போல் நேற்று வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.122க்கு விற்பனையானது .

இந்த நிலையில் இன்றும் சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.9265க்கு விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.74,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.122க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்களும் சாமானிய மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : நாளை முதல் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகள் 15% குறைப்பு..!! – நிறுவனம் அறிவிப்பு

RUPA

Next Post

“அருமையான மனிதர்..” பிரதமர் மோடியை பாராட்டிய ட்ரம்ப்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி மீண்டும் கருத்து..

Thu Jun 19 , 2025
பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]
IMG TH USA INDIA WESTI 2 1 VBDBPN0G

You May Like