இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இந்திய ரயில்வே மிகவும் எளிதான மற்றும் மிகவும் வசதியான போக்குவரத்து முறையாகும். ஒவ்வொரு நாளும், ரயில்வேயால் 13000 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி, தேஜாஸ் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட புதிய அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தற்போது ரயில் பயணம் மிகவும் வசதியாகிவிட்டது. இந்திய ரயில்வே அமைப்பு உலகின் 4வது பெரிய ரயில்வே நெட்வொர்க்காகவும் உள்ளது. ஆனால் இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்று உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் மிக நீளமான ரயிலாக சூப்பர் வாசுகி கருதப்படுகிறது. இது 3.5 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது.. மொத்தம் 295 பெட்டிகளைக் கொண்டுள்ளது. சூப்பர் வாசுகி இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் மிக நீளமான சரக்கு ரயிலாகக் கருதப்படுகிறது.
ஆச்சரியப்படும் விதமாக, 295 பெட்டிகளைக் கொண்ட சூப்பர் வாசுகி ரயிலில் மொத்தம் 6 என்ஜின்கள் ஒன்றாக வேலை செய்கின்றன.. மேலும் முழு ரயிலும் ரயில்வே கிராசிங் வழியாக செல்ல கணிசமான நேரம் எடுக்கும்.
சூப்பர் வாசுகி சரக்கு சுரங்கங்களில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தீஸ்கரின் கோர்பாவிலிருந்து நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கானுக்கு ஒரே பயணத்தில் இந்த ரயில் சுமார் 27,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்கிறது.
சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரயில் எடுக்கும் மொத்த நேரம் தோராயமாக 11.20 மணி நேரம். ஆம், சத்தீஸ்கரின் கோர்பாவிலிருந்து நாக்பூருக்கு அருகிலுள்ள ராஜ்நந்த்கானுக்கு சுமார் 27,000 டன் நிலக்கரியை எடுத்துச் செல்ல தோராயமாக 11.20 மணி நேரம் ஆகும். நீண்ட அமைப்பு அமைப்பு கொண்ட ரயில் என்பதால் சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் வாசுகியின் பெயர் இந்த ரயிலுக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Read More : 39 மனைவிகள், 94 குழந்தைகள், 36 பேரக்குழந்தைகள்.. உலகின் மிகப்பெரிய குடும்பத்தை கொண்ட நபர் பற்றி தெரியுமா?