தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் உப அறநிறுவனமான சென்னை வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ( TNHRCE Recruitment 2025 )வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடம்: எழுத்தர், அலுவலக உதவியாலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 5 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு: திருக்கோயில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
* எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
* அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானதாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மடப்பள்ளி பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அற நிறுவனங்களில் வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தேரிந்திருக்க வேண்டும்.
* காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
* திருவலகு பதவிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
* எழுத்தர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
* அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
* மடப்பள்ளி பதவிக்கு ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
* காவலர் மற்றும் திருவலகு பதவிகளுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36.800 வரை சம்பளம் வழங்கப்படும்.
நிபந்தனை: விண்ணப்பதார்களுக்கு தமிழில் நன்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://hrce.tn.gov.in/ மற்றும் https://vadapalaniandavar.hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்
- கல்வித்தகுதி சான்றிதழ், மாற்று சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- குடும்ப அட்டையின் நகல்
- ஆதார நகல்
- சுயவிலாசமிடப்பட்ட ரூ.,25க்கான தபால் தலை கூடிய உறை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி,
சென்னை-26
Read more: விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் விமான நிறுவனம் எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறது தெரியுமா..?