சென்னை: எக்ஸ்பிரஸ் இரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்..!! எந்தெந்த ரயில்கள்  தெரியுமா..?

train

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால், இன்று முதல் 5 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த 18-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இருமார்க்கமாக இயக்கப்பட்டு வருகிறது. எனவே, வெளிமாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளுக்கு இணைப்பு ரயில்களை பிடிக்க வசதியாக, சில மின்சார ரயில் சேவைகளின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் ஆகஸ்டு 18-ந்தேதி வரையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.

* கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

* செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

* கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும்.

* கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.

*கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

* அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரெயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரநாட்களில் இயக்கப்படும் ரெயில்கள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரெயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரெயில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரைக்கும், மறுமார்க்கமாக கடற்ரையில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.  எனவே, ரயில்களின் நேர மாற்றத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Read more: முகவரியை மாற்றும் ராகுல்காந்தி.. மக்களவை எதிர்கட்சி தலைவருக்கு அரசு பங்களா ஒதுக்கீடு..!!

Next Post

குட்நியூஸ்!. சிறுபான்மையினருக்கான வீட்டுவசதி திட்ட ஒதுக்கீடு 10% லிருந்து 15% ஆக உயர்வு!. அரசு அதிரடி!

Fri Jun 20 , 2025
பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 10% இலிருந்து 15% ஆக உயர்த்தப்படுவதாக கர்நாடக அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, எதிர்க்கட்சியான பாஜக இந்த நடவடிக்கையை “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்று குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர்களின் படி, இந்த நடவடிக்கை மக்கள் தொகை நிலவரங்களுக்கும், மற்றும் தற்போதுள்ள மத்திய வழிகாட்டுதல்கள் இரண்டிற்கும் ஒத்துப்போகிறது. இந்த உயர்த்தப்பட்ட ஒதுக்கீடு அனைத்து சிறுபான்மையினருக்கும், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின்கள் ஆகியோருக்கும் பயனளிக்கும் என்று […]
housing schemes quota karnataka 11zon

You May Like