ஈரானின் அழிவுக்கு காரணமான மொசாட்டின் ஆபத்தான பெண் உளவாளி பற்றி தெரியுமா?
ஈரான் – இஸ்ரேல் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உளவாளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக ஈரானுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஷியா இஸ்லாத்திற்கு மாறிய அவர், மெதுவாக ஈரானிய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகினார்.
அவரது பெயர் கேத்தரின் பெரெஸ் ஷக்டம். பிரான்சைச் சேர்ந்த அவர், அதிக பயிற்சி பெற்றவர் மட்டுமல்ல, அவர் புத்திசாலி, அழகானவர் துணிச்சலானவரும் கூட.. கேத்தரினின் வசீகரமும் புத்திசாலித்தனமான திட்டமிடலும் ஈரானின் கடுமையான பாதுகாப்பு நிறுவனங்களைக் கூட முட்டாளாக்கியது.
அவர் எப்படி உள்ளே நுழைந்தார், ஏன் யாரும் கவனிக்கவில்லை?
முதலில், கேத்தரின் தான் இஸ்லாத்தை பற்றி ஆர்வமாக இருப்பதாக கூறினார். ஒருகட்டத்தில் ஷியா இஸ்லாத்திற்கு மாறி ஈரானிய அரசாங்க அதிகாரிகளின் மனைவிகளைச் சந்தித்துப் பேசத் தொடங்கினார். காலப்போக்கில், அவர் அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் வீடுகளில் வழக்கமான விருந்தினராக மாறினார்..
கேத்தரின் மிகவும் நம்பகமானவராக இருந்ததால், வீடுகள் மட்டுமின்றி, பலத்த பாதுகாப்பு இருக்கும் இடங்களிலும் எளிதில் நுழைந்தார். ஈரானிய நிறுவனங்கள் தொலைபேசிகளையும் பார்வையாளர்களையும் கவனமாகச் சரிபார்த்தபோது, கேத்தரின் அமைதியாக புகைப்படங்களை எடுத்து ரகசிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மேலும் அதையெல்லாம் நேரடியாக மொசாட்டுக்கு அனுப்பினார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்ததால், பல உயர் ஈரானிய அதிகாரிகள் பாதுகாப்புக்காக தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடந்தபோது, அது மிகவும் துல்லியமாக இருந்தது, யாரோ ஒரு விரிவான வரைபடத்தை ஒப்படைத்தது போல் உணர்ந்தனர்.
ஈரானின் சொந்த உளவுத்துறை விசாரணை செய்யத் தொடங்கிய போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதிகாரிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கேத்தரினை அடையாளம் காண உதவியது. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது.
இப்போது எங்கே இருக்கிறார்.?
கேத்தரின் தற்போது எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஈரானின் உளவுத்துறை நிறுவனம் அவரின் சுவரொட்டிகளையும் புகைப்படங்களையும் நாடு முழுவதும் பரப்பியுள்ளது. ஆனால் கேத்தரினின் எந்த அடையாளமும் இல்லை, எந்த தடயமும் இல்லை, குரலும் இல்லை. அவர் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டதாகவும், இப்போது வேறொரு நாட்டில் வசித்து வருவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இன்று, கேத்தரின் பெரெஸ் ஷக்டம் இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் துணிச்சலான உளவாளிகளில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். அவரின் உளவுப் பணி ஈரானை மட்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை.. இந்த லகையே திகைக்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்…