2026 யாருக்கு சாதகம்..? புதிய வாக்காளர்கள் யார் பக்கம்..? லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் மக்கள் சொன்ன பெயர்..

stalin vijay eps annamalai

2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக யாருக்கு வாய்ப்புள்ளது? என்பதைப் பற்றி லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழகத்தில் முதல்வராக அதிக விரும்பத்தக்க தேர்வாக மு.க ஸ்டாலினே இருப்பது லயோலா கல்லூரி நடத்திய சர்வே முடிவு வெளியாகியுள்ளது.

சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவங்கியது. 70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, இம்மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது.

10க்கும் மேற்பட்ட பிரதான கேள்விகளை மையமாக வைத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இன்றைய அரசியல் சூழலில் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, 17.7 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அ.தி.மு.க., – 17.3 சதவீம் பேர்; த.வெ.க., – 12.20 சதவீதம் பேர்; பா.ஜ.,வுக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3.3 சதவீதம் பேர், ‘நோட்டா’ என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும், 67.99 சதவீதம் பேர் உதயநிதிக்கும், 64.58 சதவீதம் பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read more: தீவிரமடையும் மோதல்: ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் இணையாதது ஏன்..?

Next Post

போலி பத்திரங்களுக்கு Full Stop.. தமிழக பத்திரப்பதிவுத் துறை அதிரடி..!! பிளாக் செயின் டெக்னாலஜி பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா..?

Sun Jun 22 , 2025
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. […]
patta 2025

You May Like