பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… இன்று வெளியாகும் முடிவுகள்…!

Tn School students 2025

12 வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. தேர்வு துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: மழை, வெள்ளம் வந்தாலும் பார்க்க மாட்டோம்; நக்சல்களுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை!

Vignesh

Next Post

தினமும் காலையில் 1 ஸ்பூன் தேனுடன் கருப்பு மிளகாயை சாப்பிட்டால், இந்த 5 நோய்கள் நீங்கும்!

Mon Jun 23 , 2025
தினமும் காலையில் கருப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை ஒன்றாக உட்கொண்டால், அவை பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இந்த வீட்டு வைத்தியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை […]
honey papper 11zon

You May Like