மத மோதலை தூண்டும் வகையில் பேச்சு.. ஹெச். ராஜா நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

TH17HRAJARAMANATHAPURAM

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத மோதலை தூண்டும் பேசியதாக ஹெச். ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து காவல்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என்று கூறிய நீதிமன்றம் ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மேலும் இந்த விசாரணைக்கு ஹெச். ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணையின் போது காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் ஹெச். ராஜாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More : மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்கள்… விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்…!

English Summary

The Madras High Court has ordered BJP’s H. Raja to appear in person in a case filed against him for allegedly inciting religious conflict.

RUPA

Next Post

உலகில் வேகமாக பரவும் நிம்பஸ் வகை கோவிட்... 4 அசாதாரண அறிகுறிகள் இவை தான்..

Mon Jun 23 , 2025
உலகில் பரவி வரும் புதிதாக அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 கோவிட் மாறுபாட்டின் 4 அசாதாரண அறிகுறிகள் என்னென்ன? NB.1.8.1 அல்லது ‘நிம்பஸ்’ என்ற புதிய COVID-19 மாறுபாடு, உலகின் பல பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. வழக்கமான சோர்வு அல்லது காய்ச்சல் மட்டுமல்ல; இந்த முறை, வேறொரு அசாதாரண அறிகுறியும் தோன்றுகிறது. ஒமிக்ரானின் இந்த துணை மாறுபாடு மிகவும் கடுமையான நோய்க்கு வழிவகுக்காது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினாலும், உலகளாவிய கவனத்தை […]
covid variant nb 1 8 1 spreading in u s is it more dangerous do vaccines work and whats the fatality rate 1

You May Like