மக்களை சந்திக்காத தவெக தலைவர்.. ஆன்லைனில் முருகர் மாநாட்டில் கலந்து கொண்டாரோ..? – விஜயை விமர்சித்த கோவை வைஷ்ணவி

vaishnavi vijay

நடிகர் விஜய் முருகர் மாநாட்டில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டிருந்திருப்பார், அதனால்தான் வீட்டுக்கு வந்த ரசிகர்களை அவர் பார்க்கவில்லை என கோவை வைஷ்ணவி விமர்சித்துள்ளார்.


நடிகர் விஜயின் 51-வது பிறந்த நாளையொட்டி, அவரை நேரில் பார்ப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்கு திரண்ட ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் முடிந்தனர். வீட்டுக்குள்ளேயே இருந்த விஜய், வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஒரு நிமிடமும் நேரில் சந்திக்கவில்லை என்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் இருந்து பைக்கில் 6 மணி நேரம் பயணித்து வந்த இளைஞர் ஒருவர் வெறுப்புடன், “இனி விஜய்யை பார்க்கவே விருப்பமில்லை… தவெகவுக்கும் ஓட்டு போடமாட்டேன்” என கொந்தளித்துள்ளார். இந்த நிலையில், திமுக சார்பாக செயல்படும் சமூகவலைதள ஆர்வலர் வைஷ்ணவி, இன்ஸ்டாவில் புது வீடியோவொன்றை வெளியிட்டு, “விஜய் ஆன்லைனில் முருகர் மாநாட்டில் கலந்து கொண்டாரோ?”, “மக்களை சந்திக்க விரும்பாத ‘ஆன்லைன் அரசியல்வாதி’ இவர்தான்!” எனத் தாக்கமாக விமர்சித்துள்ளார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தவெக-வில் இருந்து திமுக-விற்கு தாவிய பின்னணி:

விஜய், கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சி இப்போது தமிழகத்தின் பெரிய கட்சிகளுள் ஒன்றாக வலுபெற்று வருகிறது. இக்கட்சி வளர காரணமாக இருப்பது விஜய் மட்டுமல்ல, இதில் சேர்ந்திருக்கும் சில நிர்வாகிகளும்தான். அப்படி, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தவெக நிர்வாகியாக இருந்தவர் வைஷ்ணவி. தான் செய்யும் பணிகளை அவ்வப்போது வீடியோவாகவும் இணையத்தில் வெளியிடுவது இவரது வழக்கம்.

சில வாரங்களுக்கு முன்பு வைஷ்ணவி, தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என்று தனக்கு கண்டீஷன் போடப்பட்டதாக குறிப்பிட்ட வைஷ்ணவி, இன்னும் ஒரு சில காரணங்களை அடுக்கி தான் இக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தொடர்ந்து சில நாட்களிலே செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த இவர், தற்போது விஜயை நேரடியாக விமர்சித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read more: ரூ.3,000க்கு FASTag ஆண்டு பாஸ் : எந்தெந்த சாலைகளில் செல்லாது? விதிமுறைகள் என்னென்ன? A-Z விவரம்..

Next Post

சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை.. விசாரணை வளையத்திற்குள் வரும் நடிகர் ஸ்ரீகாந்த்..!!

Mon Jun 23 , 2025
சினிமா பார்ட்டிகளில் போதைப்பொருள் சப்ளை செய்ததாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ரோஜாக்கூட்டம்’, ‘மனசெல்லாம்’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]
Actor Srikanth 1

You May Like