நடிகர் ஸ்ரீகாந்த்-திடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பிரசாத் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் மதுபான விடுதி மோதல் வழக்கில் கைதான பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு கொக்கைன் வழதுங்கியதாக விசாரணையில் தெரியவந்ததால், நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனையும் செய்தனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது..
Read more: ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி.. பொறுப்புகளில் இருந்து நீக்கம்..?