தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஜூலை 1, 2025 முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 30, 2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள், ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அதேபோல், மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்துக்குப் பதிலாக www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஆன்லைனில் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும். “நீங்கள் வசிக்கும் மனை, அல்லது நீங்கள் விற்க திட்டமிட்ட மனை, DTCP / CMDA அனுமதியில்லாததா? அப்படி என்றால், இது கடைசி வாய்ப்பு! தமிழ்நாடு அரசு, 2016-ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதியில்லாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் ஆகியவற்றை சட்டபூர்வமாக வரன்முறை செய்ய ஜூன் 30, 2025 வரை காலநீட்டிப்பு வழங்கியுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2026 வரை மட்டுமே உள்ளது.. www.tnlayoutreg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. 20.10.2016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்.. வரன்முறை செய்யாத மனைகளாக இருந்தால், இதன்மூலம் பல்வேறு இடர்பாடுகள், சிக்கல்கள் உருவாகலாம்.. குறிப்பாக, வீட்டு மின், தண்ணீர் இணைப்பு பெற முடியாது, வங்கிக் கடன்கள் மறுக்கப்படும், சொத்து விற்பனை செய்வதில் தடைகள், எதிர்காலத்தில் அரசால் கைப்பற்றப்படும் அபாயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
- உங்கள் மனையின் பதிவு தேதி 20.10.2016-க்கு முன் இருக்க வேண்டியது கட்டாயம்
- தகவல்களை சரிபார்த்து, www.tcponline.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
- தேவையான ஆவணங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்
- சட்ட ஆலோசனை பெற்றால் கூடுதல் நன்மை
- தவிர்த்தால், மின், தண்ணீர் இணைப்பு கிடைக்காமல் போகலாம், வங்கிக் கடன்கள் மறுக்கப்படலாம்.
Read more: ஆரஞ்சு அலர்ட் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..!!