தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமாரிப்புத்துறை தெரிவித்துள்ளது..
தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய போர்டல் தயாராக வருவதாகவும் அவர் தெரிவித்தார். முட்டை விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுவது போல, தினசரி அடிப்படையில் ஆட்டிறைச்சி, நாட்டுக்கோழி, கோழி இறைச்சி விலையை நிர்ணயம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆடு, கோழி உயிருடன் என்ன விலை எனவும் தினசரி அப்டேட்டில் சொல்லப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த விலைப்பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இறைச்சிக்கடைகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்றார் போல இறைச்சி விலை மாறுபட்டு இருக்கிறது. ஆனால் தற்போது ஒரே விலையில் ஆட்டிறைச்சி, கோழி விற்பனை செய்ய விலைப்பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் இந்த போர்டல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..