டிகிரி போதும்.. சென்னை மாநகராட்சியில் வேலை.. ரூ.30,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

job

சென்னையில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் உதவியாளராக பணிப்புரிய தற்போது தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் NGO/விலங்குகளுக்கான பாதுகாப்பு தங்குமிடம் அல்லது விலங்கு பாதுகாப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: விலங்குகள் மையத்தில் உதவியாளராக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னையில் இயங்கும் ஏதேனும் ஒரு மையத்தில் பணி செய்ய நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 12 மாதங்களுக்கு மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்கள் நிரந்தர பணிக்கோர இயலாது. இப்பணியிடங்கள் தற்காலிகமானவை என்பதினால், விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதார்களின் புகைப்படம்
பிறப்பு சான்றிதழ் அல்லது பிறந்த தேதி குறித்த 10/12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
வீட்டு முகவரிக்கான அடையாள அட்டை (இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அட்டை, பஞ்சாயத் அல்லது மாநகராட்சி வரி செலுத்திய ரசீது, ஆதார் அட்டை, குடும்ப அட்டை)
கல்வித்தகுதி சான்றிதழ் (பட்டப்படிப்பு சான்றிதழ்)
பணி அனுபவ சான்றிதழ்
TNAWB அளித்த ஏதேனும் சிறப்பு சான்றிதழ்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai –600003.

விண்ணப்பப்பிக்க கடைசி நாள்: 04.07.2025 மாலை 5 மணி வரை

Read more: இதய ஆரோக்கியத்திற்கு.. இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. நிபுணர் தகவல்..

Next Post

ட்விஸ்ட் வைத்த அமித்ஷா.. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர்.. அடித்து சொல்லும் நயினார் நாகேந்திரன்.. கூட்டணியில் குழப்பம்..

Fri Jun 27 , 2025
எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]
puthiyathalaimurai 2025 04 16 jqawerd4 hh5

You May Like